Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » யாழில் அதிக வெப்பநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம்

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள அதிக வெப்பநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக தோல் வியாதி மற்றும் கண் நோய் ஆகிய நோய்களுக்கு உள்ளாகி யாழ். வைத்தியசாலைகயளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்ப நிலையின் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குட்படுவதாகவும் காய்ச்சல், வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் போன்ற நீரினால் பரவும் நோய்களின் தாக்கமும் அதிகரித்து உள்ளது.

கண்களில் எரிவு மற்றும் கண்கள் சிவந்து காணப்படுதல் போன்றன காணப்படுமானால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளுமாறும்” தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com