கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல் களுடன் கையினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட மராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடு நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்ட இளைஞர் சாரமரம் முறிந்து வீழ்ந்தபோது கையின் மணிக்கட்டுப் பகுதி உடைந்தது. இதனை குணப்படுத்த அந்த இளைஞர் புக்கை கட்டினார்.
வேதனை அதிகரிக்கவே அதனைத் தாங்க முடியாமல் கடந்த செவ்வாய்க் கிழமை அந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மணிக்கட்டுப் பகுதி எலும்பு உடைந்ததுடன் புக்கை கட்டிய இடத்தில் புண் ஏற்பட்டிருந்தது. உடனடியாக வைத் தியசாலையில் பி.ஓ.பி. போடப்பட்டது.
தென்மராட்சிப் பிரதேச மக்களின் வைத் திய தேவைகளுக்கான சகல வசதிகளும் சாவகச்சேரி வைத்தியசாலையில் செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் மூட நம்பிக்கைகளை கைவிட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறு மாறு வைத்திய வட்டாரங்கள் அறிவுறுத் தியுள்ளன.
நன்றி: உதயன்