Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மீசாலையில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 79 பவுண் நகைகள் திருட்டு!

சாவகச்சேரி, மீசாலையில் நேற்று முன்தினம்  பட்டப்பகலில் ஆசிரியதம்பதியரின் வீட்டில் 79 பவுண் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்றனர். நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பிய அவர்கள் முன்கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.வீட்டுக்குள் அவர்கள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 79 பவுண் நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.மீசாலையில் ஏ9 பாதையில் இவர்கள் வீடு அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் இருக்கும்  நிலையில் இத்துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் ம.வி. ஆகியவற்றில் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com