Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு

வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியை போடுவதற்காக மின் அழியை அழுத்தும் போது மின் ஒழுக்கு காரணமாக மின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவன் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவமானது இன்று புதன்கிழமை மாலை 3 மணியளவில் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் உரும்பிராய் வடக்கு சமாதியடியை சேர்ந்த 16 வயதான பாலச்சந்திரன் விதுஷன் என்பவரே உயிரிழந்தவராவர்.

பிரேத பரிசோதனைக்கான சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com