ஊர்காவற்றுறை மூன்றாம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் வியாழக்கிழமை (நேற்று) காலை 7.30 மணியளவில் மின்னல் மற்றும் இடி வீழ்ந்ததில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
எஸ்.முடியப்பு (வயது 72) என்பவரே இவ்வாறு மின்னல், இடி தாக்கி பலியானவர் ஆவர். அத்துடன், இந்த இடி, மின்னல் தாக்கத்தில் குறித்த வீடும் சேதமடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்த வண்ணமுள்ளன.