Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மாவிட்டபுரம் ஆதீனகர்த்தா இறையடி சேர்ந்தார்

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் ஆதீன கர்த்தா மஹாராஜஸ்ரீ சு.து.சண்முகநாதக் குருக்கள் நேற்றிரவு 10.15 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அவருக்கு வயது 85.

இந்து மக்கள் மட்டுமன்றி ஏனைய மதத் தவர்களினதும் மரியாதைக்குரியவராக விளங்கிய மஹாராஜஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் வேதாகம சாஸ்திரங்களில் விற்பன்னராகத் திகழ்ந்தவர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை மீண்டும் புதுப் பொலிவு பெறுவதற்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது. அவரின் திருவுடல் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள அவரின் இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11 மணி க்கு ஆர ம்பித் து தகனக் கிரியைகள் கீரிமலை தீர்த்தக் கரை யில் இடம் பெ றும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com