Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மாதகலில் தனக்குத் தானே தீமூட்டியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

தனக்குத் தானே தீமூட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிக் கொண்டதால் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்றுமுன்தினம் உயிரிந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூளாயைச் சேர்ந்தவரும் மாதகலில் வசித்து வந்தவருமான முருகையா ஜதீஸ் என்ற 25 வயது இளம்குடும்பஸ்தரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்குப் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com