மழை வேண்டி மாதகல் விவசா யிகள் நேற்று கொ டும்பாவி எரித்து சாந்தி செய்தனர். மாதகல் பகுதியில் நீண்டகாலமாக மழை பெய்யா ததினால் அப்பகுதி விவசாய நடவடிக் கைகள் பாதிப்ப டைந்துள்ளன. மழையை நம்பி காலபோக நெற்செய்கையை மேற்கொள்ள விவ சாயிகள் திட்டமிட்டிருந்த போதிலும் மழை பெய்யவில்லை.
இதனால் விரக்தியடைந்த விவசா யிகள் சமய நம்பிக்கையின் அடிப் படையில் நேற்று கொடும்பாவி எரித்து சாந்தி செய்தனர். இதேவேளை மாதகல் அரசடி சித்திவிநாயகருக்கு குளிர்த்தி அபி ஷேகம் செய்யவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டது.