யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக கண்ணிவெடியகற்றும் பிரிவு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக அப்பகுதிக்குள் நின்று கண்ணிவெடிகளை இனம் கண்டு அகற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது இருப்பதாக கண்ணிவெடியகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்யுமாயின் யாழில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முழுமையாகப் பாதிப்படையும் என யாழ்.மாவட்டச் செயலக கண்ணிவெடியகற்றும் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.