Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » பொன்னாலை வரதராஜபெருமாள் கோயில் ஆண்டுப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீதேவி பூதேவி உடனுறை கூர்ம அவதார வரதராஜபெருமாள் கோயில் ஆண்டுப் பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமாகி செப்ரெம்பர் 07ம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 08ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
காலை 7.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி முற்பகல் 11.00 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ந்து 27ம் திகதி இரவு முத்துச் சப்பரமும், 31ம் திகதி இரவு மஞ்சமும், செப்ரெம்பர் 3ம் திகதி சங்காபிஷேகமும், 06ம் திகதி காலை கப்பல் திருவிழாவும், மாலை வேட்டைத்திருவிழாவும், இடம்பெற்று மறுநாள் காலை பூசைகள் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடன் வரதராஜபெருமாள் தேரில் எழுந்தருள உள்ளார்.

தொடர்ந்து மறுநாள் காலை 9.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி கோயிலிலிருந்து தேவியர் சமேதராய் புறப்பட்டு 11.00 மணிக்கு சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. இரவு 8.00 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறும்.

09ம் திகதி திருக்கல்யாண நிகழ்வு நடைபெறவுள்ளது.

திருவிழாக் காலங்களில் தினந்தோறும் முன்னிரவு 07.30 மணி முதல் 08.30 மணி வரை சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com