Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பெற்றோல் ராங் வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

கல்வியங்காட்டில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வெடித்துச் சிதறியது. இதனால் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டுக்கொண்டிருந்தது.

அதே சமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் ராங் வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகியது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com