யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து வீதி ஒரங்களில் வெள்ளம் தேங்கத் தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வீதிகள் உட்பட உற்புற வீதிகளும் கூட காப்பெற் இடும் பணிக்காக – கடந்த காலத்தில் இருந்ததிலும் பாhக்க உயர்த்தப்பட்டு வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக கடந்த காலத்தில் இருந்த பல வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளதுடன் வெள்ளம் வடிந்தோடும் இடங்களும் கூட வீதிகள் உயர்த்தப்பட்டமையால் வடிந்தோட முடியாத நிலமையில் காணப்படுகின்றன.
இதன் காரணமாக வீதியோரங்களில் வெள்ளம் தேங்குவதுடன் வீதியோரங்களில் உள்ள பள்ளமான காணிகளிலும் வெள்ளம் தேங்கத் தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் காணப்படும் நிலையில் இத்தகைய வெள்ளம் தேங்குவதின் மூலம் மேலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக் காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.