Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பெண்ணின் கழுத்தை நெரித்து அணிந்திருந்த நகைகள் அபகரிப்பு

சுழிபுரம் பகுதியில் பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் நேற்றுக் காலை நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீட்டிற்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் குழு, அங்கிருந்த 40 வயதுடைய பெண்ணின் வாய்க்குள் துணியை அடைத்து கழுத்தை நெரித்து நகைகளை அபகரித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணின் மகள் ஒருவரைக் கயிற்றால் கட்டிவிட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியில் சென்றிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com