பெண் ஒருவர் தனது சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது |
பிறந்த சில மணித்தியாலங்களில் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த சிசு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிசுவை வீசியெறித்த பின்னர் குறித்த தாய் சங்கானை வைத்தியசாலைக்கு சென்ற போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது: பிறந்த சிசுவை உரப்பையால் சுற்றி கிணற்றில் போட்ட தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரற்ற சிசுவும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கணவனைப் பிரிந்து வாழும் 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளையை சொந்த இடமாகக் கொண்ட குறித்த தாய் தனது சகோதரியுடன் இரத்தப் போக்கு காரணமாக ச்கானை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். குறித்த பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் சம்பவம் தொடர்பாக வினவியபோது பெண்ணிடம் இருந்து உண்மையான தகவல் வெளியாகாததை அடுத்து வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் பெண்ணை விசாரித்த போது தனக்குப் பிறந்த சிசுவை மாகியம்பிட்டி காளிகோவில் பகுதி கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். உடனடியாக குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் மாகியம்பிட்டி பகுதியில் இருந்த உயிரற்ற சிசுவையும் கிராம அலுவலர், பொதுமக்கள் உதவியுடன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் மீட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைத்துள்ளனர். குறித்த பெண் தெல்லிப்பளையை சொந்த இடமாக கொண்டதுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாகியம்பிட்டி பகுதியில் தங்கியிருந்ததாகவும், அண்மையில் வன்னியிலிருந்து மீளக் குடியமர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
You Are Here: Home » யாழ்.செய்திகள் » பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில்