வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று நேற்று முன்தினம்அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த மாணவி அதிகாலை 5.30மணியளவில் வீட்டிலுள்ள அறையொன்றினுள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டு தன்மேல் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ மூட்டியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவசபாநாதம் மேரிலிடக்ஷனா (வயது16) எனபவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.