Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பாடசாலை சேவையில் ஈடுபட்ட பஸ்ஸை வழிமறித்து சாரதி மீது கொக்குவில் பகுதியில் தாக்குதல்

பாடசாலை சேவையில் ஈடுபடும் வட பிராந்தியப் போக்குவரத்து சபைக்கு சொந் தமான பஸ்ஸை கொக்குவில் சந்தியில் வைத்து இடைமறித்த இரண்டு இளை ஞர்கள் அதிலிருந்த மாணவர்களை யும், சாரதியையும் தாக்கியதுடன் ரகளை புரிந்துள்ளனர். இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.35 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சுன்டுக்குளியிலிருந்து கே.கே.எஸ். வீதியூடாக தெல்லிப்பளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே வழிமறி க்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளது.

இதில் பஸ் சாரதியான எஸ்.லங் கேஸ்வரன் (வயது 37) என்பவர் காய மடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலி ஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை 6.00மணிக்கு சந்தேகத்திற்கு இடமான இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் கொக்குவில் பகுதியில் இடம்பெற்று வருவதாகவும் ஆனால் இது குறித்து எவரும் அலட்டிக் கொள்வதில்லை எனவும் அப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள் ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com