யாழ். மாதகல் லுர்த்ஹெபி ஆலய திருவிழா பகுதியில இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பஸ் நடத்துனரொருவர் பஸ்ஸை ஓட்டி சென்ற போது குறித்த பஸ் மின் கம்பததோடு மோதிய போதே இவர் உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பீற்றர் பொனிப்பர் என்ற 41 வயதானவரே இதன் போது உயிரிழந்தவராவர்.
குறித்த பஸ் நடத்துனர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.