Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பழைய முறிகண்டி கோயில் அருகில் வாகன விபத்து- 6 பேர் பலி(படங்கள்)

Near murugandiமாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி கோயில் அருகில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழப்பாணத்திற்கு சென்றுகொண்டிருந்த டிப்பருடன் பின்னால் பயணித்த வேன் ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Photo credit- Jeyanthan Jei

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com