யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையே நேற்றிரவு ஏற் பட்ட முறுகல் நிலையில் யாழ். பல்கலைக் கழக சூழலில் பதற்றம் நிலவியது. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மற்றும் வணிக பீட புதுமுகமாணவர் களின் வரவேற்பு நிகழ்வு இன்று நடைபெற விருந்த நிலையில் மூன்றாம் வருட மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கிடையிலேயே நேற்றிரவு முறுகல் நிலைஏற்பட்டது.
யாழ். பல்கலைக்கழகவளாகத்தினுள் நேற்றிரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட இம் முறுகல் நிலைகைகலப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களினால் துணைவேந்தர், பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த கோப்பாய்ப் பொலிஸார் மாணவர்களுக் கிடையிலான முறுகல் நிலையை முடிபுக்குக் கொண்டுவந்தனர். இவர்களுக்கிடையிலான முறு கல் நிலையையடுத்து முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.