தேசிய ரீதியிலான நாடக எழுத் துருவாக்கல் போட்டியில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் 3 ஆம் வருட மாணவி ஜி.தமிழரசி முதலிடத்தைப் பெற்றார்.பெர்னாடீன் ஞாபகார்த்தமாக தேசிய ரீதியில் பொரளை நாமேல் பாமினி புஞ்சி தியேட்டரில் நடத் தப்பட்ட நாடக எழுத்துருவாக்கல் போட்டியில் யாழ்ப்பாணப் பல்க லைக்கழக மாணவி தமிழரசியின் நாடகமும் பங்குபற்றியது.
நியதிகள் மாறுவதில்லை எனும் தலைப்பில் முதியவள் ஒருவரின் தனிமையும் அதன் வலியும் குழந் தைகள் மூலம் அத்தனிமை எவ் வாறு போக்கப்படுகின்றது என்பது பற்றி சித்திரிக்கப்பட்ட தமிழரசியின் நாடகம் முதலிடத்தைத் தட்டிச்சென்றது.