Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.தவபாலன் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இன்று (16-10-2011)மதியம் 1.30 மணியளவில் கந்தர்மடம் பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தவர்களே தாக்கினார்கள் என்றும் “தனிநாடு வேண்டுமா? தனி நாடு வேண்டுமா?” என்று தமிழில் கேட்ட படி அடித்தார்கள் என்றும் தவபாலன் சம்பவம் தொடர்பாக வினவிய போது தெரிவித்தார்

சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com