நல்லூர் கோயிலை நோக்கி தீர்த்த தினம் காலை 11 மணியளவில் சென்று கொண்டி ருந்த பறவைக்காவடி ஒன்று நல்லூர் கோவில் வீதியில் வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றை விலத்த முற்பட்டபோது தடம் புரண்டுள்ளது.
இவ் விபத்தில் யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்து சிகிச் சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.மாநகர சபை ஊழியரான அரியாலை மேற்கைச் சேர்ந்த ஆர்.இராசகுலம் (வயது 54) காவடி எடுத்து வந்தவர்களான திருநெல் வேலியைச் சேர்ந்த எஸ்.மயூரன் (வயது 18), அவரது சகாக்களான பீ.பிரதீபன் (வயது 27) மற்றும் வி.லக்ஷ்மன் (வயது 17), மயூரனின் தாயார் எஸ்.பூமாதேவி (வயது 42) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்கள்.
இவர்கள் அனைவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.