Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பருத்தித்துறை இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடை நிறுத்தம்

இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை ஊழியர்கள் இன்று மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.

சம்பள பிரச்சினைகளை திர்க்கக் கோரி ஊழியர்களனால் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையினை, இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு பிராந்திய பிரதான பொது முகாமையாளர் எஸ்.அஷ்ஹர், ஊழியர்களுடன் கலந்ரையாடி தொழிற்சங்க போராட்டத்தினை இடை நிறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாத சம்பளம் தற்போது வழங்குவதாகவும், இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு 12ஆம் திகதியும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com