யாழ்ப்பாணம், இருபாலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றை மற்றுமொரு மினிபஸ் முந்திச் செல்ல முற்பட்டபோது, அருகிலிருந்து கட்டுடன் மினி பஸ் மோதி விபத்திற்குள்ளானதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரஇணையை முன்னெடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் பாரிய விபத்து ஏற்பட்டு ஊயிர்களை காவுகொண்டது அனைவரும் அறிந்த விடையமே.