இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்.பண்ணைப் பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
திருகோணமலையிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் நால்வர் கார் ஒன்றில் தீவுப்பகுதியில் பல இடங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே அவர்கள் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பாதுகாப்புக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் காரினுள் இருந்த நால்வரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் தெரிவித்தனர்.