Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » பண்ணாகம் பகுதியில் காணிப் பிணக்கில் முதியவர் அடித்துக் கொலை

நீண்ட நாள் இடம்பெற்ற காணித் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவ மொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த சிவராசா அழகரத்தினம் (வயது 64) என்ற முதியவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

பண்ணாகம் பகுதியில் உள்ள காணியின் உரிமை தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக பிணக்கு ஏற்பட்டு வந்தது.தெல்லிப்பழை இணக்க சபையில் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் தீர்ப்பு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே வழங்கப்பட்டது.முதியவரிடம் காணியை இணக்க சபை ஒப்படைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத குறித்த நபர் இவ்வாறு முதியவரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெல்லிப்பழை பொலிஸார் தேடி வருகின்றனர். முதியவரின் சடலத்தை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com