வரலாற்று சிறப்புமிக்க நீர்வேலி கந்தசுவாமி ஆலய 2012 வருடாந்த மகோற்சவம் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நேற்றய தினம் வேட்டைத்திருவிழா நடைபெற்றது.
கந்தப்பெருமான் கோப்பாய் வயல்வெளியூடாக வலம் வந்து கோப்பாய் தரவையில் உள்ள நாச்சிமார் கோயில் பகுதியில் வேட்டையாடி கோப்பாய் இலுப்பையடி வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இளைப்பாறி மீண்டும் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.