யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஆசீர்வாதம் ஒழுங்கையிலுள்ள முன்னணி உல்லாச விடுதியின் நீச் சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீறின் கிறாஸ் உல்லாச விடுதி யில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த றெனோல்ஸ் றீகன் (வயது 28) என்ற ஹரிதாஸ்-கியூடெக் நிறுவன ஊழியரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப் பாண பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.