யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாவற்குழிப் பாலத்தில் நேற்று காலை ஹயேஸ் வான் ஒன்று தடம் புரண்டதனால் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த ஹயேஸ் வாகனமே பாலத்தில் சறுக்கித் தடம் புரண்டு அருகிலுள்ளள பள்ளத்தினுள் பாய்ந்துள்ளது. விபத்து நடந்த வேளையில் வாகனத்துக்குள் இருந்த ஏழு பேரில் இருவர் காயமடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.