மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சங்குப்பிட்டி புதிய பாலத்திற்கூடாக திருக்கேதீஸ் வரத்திற்கான விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதலாவது சேவை நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.
இப்போக்குவரத்து சேவைக்காக பிரயாணிகளிடம் 120 ரூபாய் அறவிடப் படுமென சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். மேலும் பயணம் செய்ய விரும்பு வோர் தங்கள் ஆசனப் பதிவுகளை பருத்தித்துறையில் மேற்கொள்ளலாம் என்றும் பயணிகளின் தொகைக்கேற்ப போக்குவரத்து சேவையை நடத்துவ தற்கு பஸ் வண்டிகள் தயாராக உள்ளனவென்றும் தெரிவித்தார்.