Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நாளை புதிய ஊடகவியலாளர் அமைப்பு யாழ்ப்பாணத்தில் உதயம்

புதிய ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வும் நிர்வாகக் குழுத்தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அடுத்து சுதந்திரமான ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தேவை உணரப்பட்டது. இதனை அடுத்தே புதிய ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கு வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. புதிய செயற்திறனுள்ள ஊடகவியலாளர் அமைப்பை உருவாக்குவது என்று இந்தக் கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

நாளை இடம் பெறும் நிர்வாகக் குழுத்தெரிவில் குடாநாட்டு ஊடகவியலாளர்களையும், ஊடக மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுவித்துள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com