நவாலி சென். பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய விளையாட்டு மைதானத் திறப்புவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3.00 மணிக்கு நவாலி கல்லுண்டா யில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் ஞா.க. அன்றூட் கிறேசியன் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக நவாலி பங்குத்தந்தை அருட்திரு ஜெ.சோதிநாதனும் சிறப்புவிருந்தினர்களாக வலிகாமம் உதை பந்தாட்ட லீக் தலைவர் நா.நவரத்தினராசா, யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக் தலைவர் எஸ்.அன்ரனிப்பிள்ளை, நல்லூர் பிரதேச சபை செயலாளர் றே.மே.சாந்தசீலன், நவாலி கிழக்கு கிராம அலுவலர் ரி.நித்தியானந்தம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.