யாழ். நல்லூரில் அமைந்திருக்கும் தீர்த்தக்கேணியில் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவமொன்று இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெற்றுள்ளது.
சூரன்போர் நிகழ்வையொட்டிய வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வந்த போதே பிரஸ்தாப இளைஞன், அங்கிருந்த மதில் சுவரில் ஏறி உட்கார முற்பட்டு தவறி தீர்த்தக்கேணியில் விழுந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் வர்ணகுலசிங்கம் கனு என்று தெரிவதுடன், அவருக்கு சுமார் பதினைந்து வயது இருக்கலாம் என்றும் தெரிய வருகின்றது