நல்லூர் கந்தனின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இன்று காலை 7 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடை சூழ தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயச் சூழல் முழுவதும் நிரம்பியிருந்ததனைக் காண முடிந்தது. பக்தர்கள் காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சனை செய்தும், அடி அழித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களைக் களித்தனர்.
மேலதிக புகைப்படங்களுக்கு இங்கே செல்ல