நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட ராஜகோபுரத்தின் நவகலாபிஷேகம் கார்திகை உற்சவமான இன்று(21-08-2011)காலை இனிது நிறைவேறியது. அதிகாலை4.30 மணியிலிருந்து ஆலயத்தை நோக்கி படையெடுத்தவண்ணம் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஆறுமுகப் பெருமான் வெளிவீதி வலம்வந்து புதிய கோபுரத்தின் எதிரே வீற்றிருந்த வேளையில் கோபுரத்திற்கு குடமுழுக்கு செய்யப்பட்டு. கோபுர வாசல் திறக்கப்பட்டடு அவ் வாசலூடாக எம்பெருமான் உள்ளே சென்றார்.
இன்று மாலை கார்திகை திருவிழாவாகும் எம்பெருமான் காத்திகை சப்பரத்தில் வெளிவீதி வலம்வந்து அருள்புரிவார்.
கோபுரத்தை வடிவமைத்த கலைஞர்கள் முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தவர்களே.
குடமுழுக்கு புகைப்படங்களை பார்ப்பதற்கு திருவிழா கால புகைப்பட தொகுப்பிற்கு செல்ல அழுத்தவும் .