நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா வான இன்று அதிகளவில் திருட்டு இடம்பெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக அதிகள வான பொலிஸ் புலனாய்வுத்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றுச் சப்பறத் திருவிழாவின்போது இந்து பக்தர்கள் போன்று உடையணிந்த சர ளமாகத் தமிழ் பேசக் கூடிய பொலிஸ் புல னாய்வுத் துறையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோன்று இன்றும் நாளையும் அவர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவான இன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந் நிலையில் திருடர்கள் தமது கைவரி சைகளைக் காட்ட முன்வருவர். இதனைக் கருத்தில் கொண்டு திருடர்களின் தொல்லை களைக் கட்டுப்படுத்தப் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.