நல்லூர் வீதியில் நேற்று முன்தினம் பெண்னொருவரிடமிருந்து தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருடர்கள் கொடிகாமம் பொலிஸாரால் பிடிக்கப்பட்டனர்.
இது பற்றித் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்னொருவரை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், பெண் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை அபகரித்னர்.மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்தேவாவிற்கு கிடைத்த தொலைபேசி தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச்சோதனை நடவடிக்கை மூலமே இந்த திருடர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.அத்துடன் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு திருடர்களும் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.