யாழ்ப்பாணம், நயினாதீவு மயிலடி கடற்கரைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை மர்மப்பொருளொன்று வெடித்ததில் சிறுவனொருவன் பலியாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நயினாதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எஸ்.றூபன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.
கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த இம்மர்மப்பொருளை எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் படுகாயமடைந்த இச்சிறுவன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இச்சிறுவனின் தலையிலும் நெஞ்சுப்பகுதி மற்றும் கை, கால்களிலும் காயமேற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.