மன உளைச்சல் காரணமாக நஞ்சருந்தியதாகக் கூறப்படும் வயோதிப மாது ஒருவர் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காது மரணித்துள்ளார்.
மானிப்பாய் தெற்கு கட்டுடையைச் சேர்ந்த 65 வயது பரமேஸ்வரி ஞானபதி என்பவரே இவ்வாறு இறந்தவர் ஆவார். இன்று அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அரளி வித்து அரைத்து உண்டு தற்கொலைக்கு முயன்றதையடுத்து அவசர சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு இனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இன்று இரவு சிகிச்சை பலனளிக்காது இறந்து போனார்.இவரது மன உளைச்சலின் காரணத்தை உறவினர்களிடம் அறிய முயன்றபோது அதுகுறித்து தெரியப்படுத்த மறுத்துவிட்டனர். இவரது மரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.