யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆற்றில் செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு நீராடச் சென்ற பெண்ணொருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுக் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வட்டு வடக்கு காரைநகர் சித்தங்கேணியைச் சேர்ந்த சிவசுப்பரமணியம் மாலினி வயது 38 என்பவரே தாயாருடன் ஆற்றில் நீராடும் போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.