Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் அனுட்டிக்கப்பட்டு வரும் உலக குடியிருப்பு வாரம்

வருடந்தோறும் உலக குடியிருப்பு வாரம் யாழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வருடம் யாழ் தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் உலக குடியிருப்பு வாரம் 24.09.2012 – 01.10.2012 வரை கொண்டாடப்படுகின்றது.

நிகழ்வுகள் அனைத்தும் ‘மாற்றமுறும் குடியிருப்புக்களும் உருப்பெறும் வாய்ப்புக்களும்’ எனும் தொனிப்பொருளில் இவ்வாரம் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

1ம் நாள் நிகழ்வாக
24.09.2012 20 பயனாளர்களுக்கு வீட்டத்திட்ட உறுதிகள் யாழ்மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களால் தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் திரு.நோயல் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது

2ம் நாள் நிகழ்வாக
25.09.2012 பி.ப 02.00 மணியளவில் குருநகர் தொடர் மாடி வீடமைப்புதிட்டத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனைதொடந்து சமுக சீர்கேடுகளை சட்டிக்காட்டும் வகையில் வீதி நாடகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.

3ம் நாள் நிகழ்வாக
காலை குருநகர் துஃ68 கிராமசேவ பிரிவில் கடந்த மே அத்திவாரமிடப்பட்ட வீட்டுக்கான புதுமனை திறப்பு விழாவும் மாலை நாவந்துறை கண்ணாபுரம் வீடமைப்புத்திட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி முகாமையாளர் திரு.நிறஞ்சன் அவர்களால் சுயதொழில் முயற்சி சம்பந்தமான ஆலோசனைக்கருத்தரங்கும் நடைபெற்றது.

படங்கள் – தயாரூபன்




Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com