அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி முதலாம் இடத்தையும், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியும் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு மரியஸ்ரெலா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.
இரு அணிகளும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பது ஆண்டு கால வரலாற்றில் யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.