தேசிய பாதுகாப்பு தினத்தை ஒட்டிய தேசிய வைபவம் இன்று காலை 9 மணிக்கு யாழ். வீர சிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொள் கின்றார்.
இந்த வைபவத்தில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, இடர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டுலிப் விஜே சேகர, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்வர். சுனாமி பேரவலத்தை வருடந் தோறும் நினைவு கூர பிரகடனம் செய்யப்பட் டுள்ள தேசிய பாதுகாப்பு தினத்தை ஒட் டிய தேசிய வைபவம் முதல் தடவை யாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடை பெறுகின்றது.
You Are Here: Home » யாழ்.செய்திகள் » தேசிய பாதுகாப்பு தின வைபவம் இன்று யாழ். நகரில்