Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » தேசியப் பாடசாலையாகியுள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரி

மானிப்பாய் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையாகக் கல்வி யமைச்சினால் தரமுயர்த்தப்பட் டுள்ளது.
இதற்கான உத்தியோக பூர்வ அறிவித்தலை கல்வி அமைச்சு கல் லூரி அதிபருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பாகக் கல்லூரியின் அதிபர் க.சிவனேஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது:
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் எமது கல்லூரியின் கல்விச் சாதனைகள், விளையாட்டுத் துறை சார்ந்த சாதனைகளின் அடைவு மட்டம் இரட்டிப்பாக இருந்தது.         இதன் காரணமாக எமது கல்லூரி கல்வி அமைச்சி னால் தேசியப் பாடசாலையாக தர முயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
ஆயிரத்து 200 மாணவர்கள் கல்விகற்று வருகின்ற இந்தக் கல்லூரி கடந்த சில மாதங் களுக்கு முன்னர் நூற்றாண்டு விழாவைக்கொண்டாடியுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்தில் முதல் தேசிய பாடசாலையாக மானிப்பாய் இந்துக் கல்லூரி தர முயர்த்தப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கதாகும்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com