தெல்லிப்பழை அருள்மிகு துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக ஆரம்பமானது.
காலையில் விசேட பூசைகள் இடம் பெற்று அதைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையும் சரி யாக மு.ப. 11 மணிக்கு கொடியேற்ற வைப வமும் நடைபெற்றது.
கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொள்ளவென குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவில் பக் தர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆலயத் தில் தொண்டர்கள் சேவை உரிய முறையில் இடம்பெற்றதுடன் பொலிஸாரும் கடமை யில் ஈடுபட்டிருந்தனர்.
நன்றி: உதயன்