Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயப் பெருந்திருவிழா 12 ஆம் திகதி ஆரம்பம்

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வேட் டைத் திருவிழாவும், 21 ஆம் திகதி சனிக் கிழமை பிற்பகல் 4 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
தினமும் காலைத் திருவிழாவில் காலை 8 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், 9 மணிக்கு விசேட பூசை, 9.30 மணிக்கு ஸ்தம்பப் பூசை என்பன நடைபெற்று முற்பகல் 10.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா வருதலும் இடம்பெறும்.
மாலைத் திருவிழாவில் 4 மணிக்கு சாயரட்டைப் பூசை, 4.30 மணிக்கு ஸ்தம்பபூசை,5.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை என்பன நடை பெற்று சுவாமி திருவீதியுலா வருதலும் இடம் பெறும். அர்த்தஜாமப் பூசை இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com