தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வேட் டைத் திருவிழாவும், 21 ஆம் திகதி சனிக் கிழமை பிற்பகல் 4 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
தினமும் காலைத் திருவிழாவில் காலை 8 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், 9 மணிக்கு விசேட பூசை, 9.30 மணிக்கு ஸ்தம்பப் பூசை என்பன நடைபெற்று முற்பகல் 10.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா வருதலும் இடம்பெறும்.
மாலைத் திருவிழாவில் 4 மணிக்கு சாயரட்டைப் பூசை, 4.30 மணிக்கு ஸ்தம்பபூசை,5.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை என்பன நடை பெற்று சுவாமி திருவீதியுலா வருதலும் இடம் பெறும். அர்த்தஜாமப் பூசை இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
நன்றி: உதயன்