தென்மராட்சிப் பிரதேசத்தில் வீதிகளில் மதுபோதையில் நின்று பெண்களிடம் சேஷ்டை விடுவோரை கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிபதி மா.கணேசராஜா கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வீதிகளில் நின்று சேட்டைகள் புரிவதாக நீதிமன்றுக்கு முறைப்பாடுகள் வருவதால் இவ்வாறான குற்றச்செயல்களைப் புரிவோரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
பாடசாலை முடிவுறும் நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் முடிவுறும் மாலை நேரங்களிலும் பாடசாலை மாணவி களுடன் சேஷ்டை புரிவோரை கைது செய்து முற்படுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் சாவகச்சேரி புகையிரத நிலையத்துக்கு அருகில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்வோர் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட் டுள்ளார்.
– உதயன்