யாழ்ப்பாணம் தட்டாதெருப் பகுதியில் பல் கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவன் தங்கராசா நிரஞ்சன் (வயது 22) என்பவரே இவ்வாறு சடல மாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
பிரஸ்தாப மாணவன் நேற்றைய தினம் நாச்சிமார் கோயில் தேர்த் திருவிழாவிற்கு செல் வதற்கு ஆயத்தமாகியுள்ளார். குடும்பத்தவர்கள் முன்கூட்டியே கோயிலுக் குச் சென்றிருந்தனர். தேர்த்திருவிழா முடிந்து முற்பகல் 11 மணி யளவில் குடும்பத்தவர்கள் வீடு திரும்பியபோது பிரஸ்தாப மாணவன் சால்வை ஒன்றில் தொங் கியபடி சடலமாகக் கிடப்பதை கண்டுள்ளனர்.
இதை அடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோனைக்குட்படுத் தப்பட்டபின் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டது