துன்னாலை மத்தி கிராவளைப் பகுதியில் இரவு வேளை இளம் யுவதி ஒருவருடன் சேஷ்டையில் ஈடுபட்டதுடன் அவரது தலைக்கு முகமூடி போட்டு அச்சுறுத்திய மூன்று சந்தேக நபர்களை நேற்று முன்தினம் புதன்கிழமை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மேற்படி யுவதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை புரிவதாகவும் சம்பவ தினம் அன்று இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சமயம் மறைந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் மேற்படி யுவதியுடன் சேஷ்ட்டையில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக யுவதியின் தந்தையார் நெல்லியடிப் பொலிஸாருக்கு செய்த முறைப் பாட்டையடுத்து மேற்படி மூன்று சந்தேக நபர்களை நெல்லியடி பொலிஸார் கைது செய்து நேற்றையதினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன் நிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.