திருநெல்வேலி பனிக்கர் வளவில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மரக்கறிச் சந்தை வியாபாரியான எஸ்.இதயன் (வயது 26) என்பவரே உயிரிழந்தவராவார்.
நேற்றுமாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் பிரஸ்தாப நபர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலன் இன்றி அங்கு உயிரிழந்தார்.